பொன்முடியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொகை மற்றும் ஆவணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது அமலாக்கத்துறை!

DMK K. Ponmudy
By Jiyath Jul 18, 2023 06:38 PM GMT
Report

அமலாக்கத்துறை சோதனை

அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (ஜுலை 17) காலை 7 மணிக்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் சிகாமணி எம்.பி ஆகியோருக்கு சொந்தமான சென்னை மற்றும் விழுப்புரம் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் சோதனை மேற்கொண்டனர்.

பொன்முடியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொகை மற்றும் ஆவணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது அமலாக்கத்துறை! | Ponmudi Ibc Tamil Eddepartment Chennai

இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலணியில் உள்ள இல்லத்தில் தங்கி இருந்த அமைச்சர் பொன்முடியிடம் 7 பேர் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இரவு 8 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தனி அறையில் வைத்து 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அதிகாலை 3 மணிக்கு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொன்முடியை இன்று 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறையினர் தெரிவித்திருந்தனர். பொன்முடியும் அவரது மகன் சிகாமணி எம்பியும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகி அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கைப்பற்றப்பட்ட தொகை மற்றும் ஆவணங்கள் 

இந்நிலையில் அவரிடம் இருந்து எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்று அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது "அதில் அமைச்சர் பொன்முடி வீட்டிலிருந்து ரூ.81.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.13 லட்சம் மதிப்புள்ள பிரிட்டிஷ் பவுண்டுகள் உள்ளிட்ட வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

முறைகேட்டில் மூலம் ஈட்டப்பட்டதாக ரூ.41.9 கோடி வய்ப்பு நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பொன்முடி வீட்டில் பறிமுதல் செய்யப்பட தொகை மருத்துவமனையில் இருந்து வந்ததாக தவறான தகவல் தெரிவித்தனர். அதில் தவறான கணக்கு காட்ட முயற்சி செய்ததும் கண்கண்டுபிடித்து தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட தொகை தொடர்பாக சரியான விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை என்றும் குற்றத்தை நிரூபிக்கும் வகையில் பல ஆவணங்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

பொன்முடியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொகை மற்றும் ஆவணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது அமலாக்கத்துறை! | Ponmudi Ibc Tamil Eddepartment Chennai

முறைகேடு செய்த பணம் மூ லம் இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு நிறுவனங்கள் வாங்கப்பட்டுள்ளது. . வெளிநாட்டு நிறுவனங்களை குறைவான தொகைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களை வாங்க ஹவாலா மூலம் பெரும் தொகை பரிமாற்றம் நடந்துள்ளது. செம்மண் குவாரிகளை விதிமுறைகளை மீறி மகன் மற்றும் பினாமிகளுக்கு பொன்முடி உரிமம் வழங்கியுள்ளார்.

சட்ட விரோதமாக மணல் அள்ளியதில் கிடைத்த வருவாய் பினாமி வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. இந்தோனேசியா நிறுவனத்தை ரூ.41.57 லட்சத்துக்கு வாங்கி ரூ.100 கோடிக்கு விற்றதாக கணக்கு கட்டப்பட்டுள்ளது என அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளை அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.