எதற்கும் துணிந்தவன் பொள்ளாச்சி சம்பவத்தை சொல்கிறதா : களக்கத்தில் கட்சி வட்டாரம்
சூரரைப் போற்று வெற்றியை அடுத்து பெரும் வெற்றியினை வாகை சூட தயாரகியுள்ளார் சூர்யா.
பாண்டிராஜின் எதற்கும் துணிந்தவன் பெரும் வெற்றியைக் கொடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. எதற்கும் துணிந்தவன்' டீசரில் உயரமான வாளை தூக்கிக்கொண்டு எக்கச்சக்க கோபத்தோடு வரும் சூர்யா புகைப்படம் இணையத்தில் செம வைரல் என்றே கூறலாம்.
அதே சமயம் எதற்கும் துணிந்தவன் படத்தில் தமிழகத்தையே கொந்தளிக்க வைத்த பொள்ளாச்சி சம்பவம் மையமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.
அதற்கு தகுந்தார் போல் படத்தின் டீசரில் பாழடைந்த பங்களாவில் ஏராளமான இளைஞர்கள் தலை குப்புறக் கிடக்க ஒருவனின் காலைப் பற்றி இழுத்துக்கொண்டு வரும் சூர்யா கடும் கோபத்தில் வருவது போல் டீசர் உள்ளது.
ஆகவே எதற்கும் துணிந்தவன் படத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் நடந்த பல விஷயங்களைக் சொல்லியிருக்கலாம் என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.
பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுக கட்சியின் முக்கிய புள்ளிகளின் பெயர் இடம் பெற்று சர்ச்சையானதால் தற்போது இந்த டீசரை பார்த்து வழக்கு தொடர்புடையோர் களக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.