தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப் போவது யார் தெரியுமா? இதோ பிலவ பஞ்சாங்கத்தின் கணிப்பு!
தமிழ் புத்தாண்டான இன்று பஞ்சாங்கம் படித்து பிலவ ஆண்டு பலன் சொல்லப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்பு இருப்பதாக பட்டாச்சாரியார் தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கு வருட பிறப்பையொட்டி, சேலம், அம்மாப்பேட்டை, சவுந்திர ராஜ பெருமாள் கோவிலில் பட்டாச்சாரியார்கள் கண்ணன், வேதமூர்த்தி உள்ளிட்டோர் பிலவ ஆண்டுக்கான பஞ்சாங்க பலனை படித்தனர்.
அதன்படி அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது -
புத்தாண்டின் ராஜாவாக பூமிகாரகனாகிய செவ்வாய் அமைந்திருப்பதால் நல்ல மழை பொழிந்து, பூமி சுபிட்சம் அடைய போகிறது. பயிர்கள் செழித்து வளர்ந்து நல்ல மகசூலை விவசாயிகளுக்கு தரும். விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெறுவார்கள். புத்தாண்டு கிரக நிலை கணிப்புப்படி, தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.
கடந்தாண்டை போன்று, நடப்பாண்டும் புதுப்புது வைரஸ் உருவாகும். கால்நடைகளுக்கு வியாதிகள் உண்டாகும். மருத்துவ துறையில் பல சாதனைகள் நடந்து வியாதிகளுக்கு தடுப்பு மருந்துகள் கிடைக்கப்போகிறது. இந்தாண்டில் 12 புயல் உருவாக உள்ளது. இவற்றில் ஒன்பது புயல் இந்தியாவை தாக்கும். புயல் வெள்ளத்தால் சென்னை பயங்கரமாக தத்தளிக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
