அதிமுகவை சமூக நீதிக்கான ஒரு இயக்கமாக இபிஎஸ் நடத்த வேண்டும் : திருமாவளவன்
அதிமுகவை சமூக நீதிக்கான ஒரு இயக்கமாக இபிஎஸ் நடத்த வேண்டும் என விசிக கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் தேர்வு
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார், இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில், மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.
துரோகம்
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் சமூக நீதிக்கு எதிரியான பாஜக-வை அ.தி.மு.க தூக்கி சுமப்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களுக்கு கருத்தியல் அடிப்படையில் செய்கிற மிகப்பெரும் துரோகம்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை நெஞ்சில் நிறுத்தி அதிமுகவை சமூக நீதிக்கான ஒரு இயக்கமாக இபிஎஸ் நடத்த வேண்டும், தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இபிஎஸ் தனது அரசியல் காய்களை நகர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார்