என்ன உண்மையா லவ் பண்றியா? ஜாமினில் உள்ள பெண் கைதியுடன் ஆபாசமாக பேசும் உளவுத்துறை போலீஸ்காரர்

Chennai Tamil Nadu Police
By Thahir Feb 24, 2023 02:34 AM GMT
Report

கொலை வழக்கில் தொடர்புடைய பெண் கைதியுடன் உளவுத்துறையில் பணியாற்றும் காவலர் ஒருவர் ஆபாசமாக பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் கைதியுடன் உளவுப்பிரிவு போலீஸ்காரர் ஆபாச பேச்சு 

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினரும் திமுக வார்டு செயலாளராகவும் இருந்த சதீஷ் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட குன்றத்துாரைச் சேர்ந்த திமுக முன்னாள் ஒன்றிய பிரதிநிதி எஸ்தர் என்ற யோகேஸ்வரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் எஸ்தர் என்ற யோகேஸ்வரி தற்போது ஸாமினில் உள்ளார். இவருடன் சோமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஐ.எஸ் உளவுப் பிரிவைச் சேர்ந்த காவலர் மாதவன் என்பவர் செல்போனில் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

policeman talking obscenely to female prisoner

மேலும் கொலை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சச்சினை யாராலும் பிடிக்க முடியாது என்று மாதவன் பேசுவதும், மாதவனுடன் எஸ்தர் கொஞ்சி பேசுவதும் ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.