தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி - உயர்நீதிமன்றம் கேள்வி
நவம்பர் 6ம் தேதி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
ஆர்எஸ்எஸ் பேரணி
தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டிஜிபியிடம் மனு அளித்தனர்.
இந்த மனு மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ஊர்வலம் நடத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 22ம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினார்.
நீதிபதி கேள்வி
இதையடுத்து தமிழகத்தில் வருகிற நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது .
அப்போது நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அமல்படுத்தப்பட்டதா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் காவல்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கின் விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.