ரவுடி மீது போலீசார் துப்பாக்கிசூடு - மதுரையில் பரபரப்பு

Tamil nadu Tamil Nadu Police Madurai
By Thahir Feb 28, 2023 05:37 AM GMT
Report

மதுரை மாட்டுத்தாவணியில் ரவுடியை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர்.

ரவுடி மீது துப்பாக்கிச்சூடு 

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் ரவுடி வினோத். இவர் மீது மதுரையில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அங்கு வந்த ரவுடி வினோத்தை விசாரித்ததாகவும் மதுரை மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

Police opened fire on the raider

அப்பொழுது போலீசாரிடம் இருந்து தப்பிக்க ரவுடி வினோத் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசாரை தாக்க முயன்றார். இதனால் போலீசார் தற்காப்புக்காக ரவுடி வினோத்தை காலில் துப்பாக்கியால் சுட்டனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரவுடி வினோத் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.