பஸ் ஸ்டாப்பில் மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்; மாணவன், மாணவியிடம் போலீசார் விசாரணை
சிதம்பரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் ப்ளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவருக்கு மாணவன் தாலி கட்டிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் மாணவன், மாணவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்
கடலுார் மாவட்டம், சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பேருந்து நிறுத்தம் ஒன்றில் மாணவி ஒருவருக்கு மாணவர் ஒருவர் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டியுள்ளார்.
இந்த வீடியோவை உடன் இருந்த மாணவன் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.அந்த வீடியோவில் கட்டுயா...கட்டுயா என்று கூற மாணவன் மாணவிக்கு தாலி கட்டியுள்ளார்.
அப்போது உடன் இருந்த மாணவர்கள் பூக்களுக்கு பதில் காகிதங்களை கிழித்து வீசியுள்ளனர்.வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகவே..போலீசார் விசாரணை நடத்தினர்.
பேருந்து நிறுத்தத்தில் மாணவன் தாலி கட்டிய விவகாரத்தில், மாணவி 12ம் வகுப்பு படிப்பதும், தாலி கட்டிய மாணவன் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வருவதும் தெரியவந்துள்ளது.
தற்போது மாணவன், மாணவி இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.