சென்னையில் நடுரோட்டில் நடத்துனரை சரமாரியாக தாக்கிய போலீஸ்..!
சாலையில் நடந்து சென்ற நடத்துனர் கீழே எச்சில் துப்பிய போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் தன்னை நோக்கி துப்பியதாக நினைத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை பேருந்துநிலையம் எதிரே நேற்று காலை சாலையில் சென்ற நடத்துனர் ஒருவர் எச்சில் துப்பியுள்ளார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த லுாயிஸ் என்ற காவலர் தன்னை நோக்கி துப்பியதாக கருதி அவரை சரமாரியாக தாக்கினார்.
இதில் அந்த நடத்துனர் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நடத்துனரை மீட்டு சைதாப்பேட்டை மருத்துமனையில் அனுமதித்தனர்.
நடத்துனரை தாக்கிய லுாயிஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சைதாப்பேட்டை உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல்துறையினர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் காவலர் கொலைவெறி தாக்குதல்...
— Melwin (@melwins23) May 15, 2022
சென்னை சைதாப்பேட்டையில் சாலையில் எச்சில் துப்பிய நபரை காவலர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.. @CMOTamilnadu @mkstalin @tnpoliceoffl @chennaipolice_#policechennai pic.twitter.com/cx8RkTo5RS
அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான் : மேலும் இரண்டு விமானங்கள் விரட்டியடிப்பு IBC Tamil
மாகாணசபைத்தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் - சிவில் சமுகங்கள் ஒன்றிணைவு : உடன்பாடும் கைச்சாத்து IBC Tamil
புதிய தாக்குதலை தொடுத்தால் பேரழிவை ஏற்படுத்தும் பதிலடி : அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை IBC Tamil