திருக்கடையூரில் பத்திரிகையாளர்கள் மீது போலீசார் தாக்குதல் - பரபரப்பு சம்பவம்
By Nandhini
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். ராமசந்திரன் கால்வாயில் நிறைவடைந்த தூர்வாரும் பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், திருக்கடையூரில் ஆய்வு செய்த தமிழக முதலமைச்சர் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முதல்வர் நிகழ்ச்சியை படம் எடுக்க விடாமல் பாதுகாப்புக்காக வந்த காவல்துறையினர் பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தி அராஜகம் செய்துள்ளனர்.