கொடூரத்தின் உச்சம் - ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண்.. 42 வயது நபர் செய்த காரியம்!

Sexual harassment Kerala Crime
By Vidhya Senthil Oct 26, 2024 01:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு ஆண் ஒருவர் திடீரென முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இளம்பெண்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்குச் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அதன் பிறகு, அங்கிருந்து நேற்று காலை பாலக்காடு - சாலிமர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

sexual harrasment

அப்போதுபடுக்கை வசதி கொண்ட எஸ் 14 பெட்டியில் பெற்றோருடன் இரவில் அந்த இளம்பெண் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் அதே பெட்டியில் பயணம் செய்த 42 வயது மதிக்கத்தக்கப் பயணி ஒருவர் அந்தப் பெண்ணுக்குக் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

நாயை கட்டிவைத்து அடித்து கொன்ற கொடூரம் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

நாயை கட்டிவைத்து அடித்து கொன்ற கொடூரம் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அலறியடித்து சப்தம் போடவே தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் மற்றும் மற்ற பயணிகளும் எழுந்துள்ளனர். அப்போது அந்தப் பெண் நடந்த சம்பவத்தைக் கூறியதையடுத்து, பயணிகள் அனைவரும் முத்தம் கொடுத்த பயணியைச் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

 பெரும் அதிர்ச்சி

அப்போது, அந்த நபர் குடிபோதையிலிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த ரயில் இன்று காலை கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்த போது ரயில் நிலைய காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அப்பெண் அளித்த புகாரின் பேரில் அந்த நபரை காவல்துறை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

arrest

விசாரணையில், அந்த நபரின் பெயர் அருண் மாலிக் (வயது 42) என்பதும், கேரளா மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.