வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது : வயதான தம்பதிகளை சேர்க்க போலீஸார் செய்த செயல் , வைரலாகும் வீடியோ

Love Respect Couple Fight
By Irumporai Apr 14, 2022 06:46 AM GMT
Report

உத்திரபிரதேசத்தில் வயதான தமபதியினரை சேர்த்து வைக்க காவல்துறையினர் செய்த செயல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

உத்திர பிரதேச மாநிலத்தின் காட்ராபஸார் பகுதியை சேர்ந்த வயதான தம்பதியிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை வருவதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் நேற்று, 75 வயதான தம்பதி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியுள்ளது. இந்த நிலையிலும் இருவரும் அந்த ஊரில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது  : வயதான தம்பதிகளை சேர்க்க போலீஸார் செய்த செயல் , வைரலாகும் வீடியோ | Police Advise Elderly Couple Dispute Between Them

அப்போது அங்கிருந்த காவல்துறையினர் வயதான தம்பதியினர் இருவரையும் சமாதானம் செய்து இனிப்பு வாங்கி வந்து ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

அதன்படி, அந்த வயதான முதியவர் தனது மனைவிக்கு இனிப்பினை ஊட்டிவிட அவ்வாறே அந்த பாட்டியும் தனது கணவருக்கு செய்துள்ளார்.

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது  : வயதான தம்பதிகளை சேர்க்க போலீஸார் செய்த செயல் , வைரலாகும் வீடியோ | Police Advise Elderly Couple Dispute Between Them

குறிப்பாக  அந்த முதியவர் தனது மனைவிக்கு இனிப்பை ஊட்டும்போது, ​​தனது மனைவியிடம் நகைச்சுவையாக, “ஹம்ரா ஹத்வா நா காத் ஜாயி (என் கையைக் கடிக்காதே) என்று கூறினார்.    

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது, இந்நிலையில், வயதான தம்பதியை சமாதானப்படுத்தி ஒன்றுசேர்த்த காவல்துறை அதிகாரிகளை மக்கள் பாராட்டிவருகின்றனர்.