‘KGF - 2’ ராக்கி பாய் ஸ்டைலில் விழிப்புணர்வை ஏற்படுத்திய கர்நாடகா போலீஸ் - வைரலாகும் புகைப்படம்

By Nandhini Apr 28, 2022 07:36 AM GMT
Report

உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக கடந்த ஏப்ரல் 14ம் தேதி, யாஷின் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானது.

கேஜிஎஃப் 2 ஆம் பாகம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் காட்சிகள், ரசிகர்களை ரசிக்க வைக்கும்படி அமைந்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கலெக்‌ஷனை கேஜிஎஃப் 2 திரைப்படம் பெற்றுள்ளது.

படம் வெளியாகி 2ம் நாளே, கேஜிஎஃப் 2 திரைப்படம் 300 கோடிக்கு மேல் உலகளவில் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில், கொல்கத்தா போலீஸ் ராக்கி பாய் ஸ்டைலில் OTP யை யாரிடமும் பகிராதீர்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.