இறைச்சியில் விஷம் வைத்து புலியைக் கொன்ற இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்

death meat kill poison tiger
By Praveen Apr 21, 2021 09:05 PM GMT
Report

நீலகிரியில் இறைச்சியில் விஷம் கலந்து கொடுத்து புலியை கொலை செய்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வன பகுதியில் கடந்த ஆண்டு நவம்பவர் மாதம் பெண் புலி விஷம் வைத்து கொல்லப்பட்டது. அதன் 2 குட்டிகளை வனத்துறையினர் மீட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் மசினகுடியை சேர்ந்த கரியன் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், மேய்ச்சலின் போது கால்நடைகளை புலி கொன்று விடும் என்ற அச்சத்தில், இறைச்சியில் விஷம் கலந்து வைத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் ஒருவரை கைது செய்த போலீசார், மற்ற இருவரை தேடி வருகின்றனர்.