36 மணி நேரம், 10,000 வரிகள் - நடிகர் விஜய்க்காக உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்!

Vijay Tamil Cinema Tamil nadu Tamil Actors Tirupathur
By Jiyath Apr 21, 2024 04:56 AM GMT
Report

விஜய் ரசிகர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

நடிகர் விஜய்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஜய். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் ரசிகர்கள் உள்ளனர். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

36 மணி நேரம், 10,000 வரிகள் - நடிகர் விஜய்க்காக உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்! | Poem In 10000 Lines For Vijay A World Record

மேலும், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியையும் அவர் தொடங்கியுள்ளார். இதனிடையே விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற கில்லி திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ள சம்பவமும் நேற்று அரங்கேறியுள்ளது.

உலக சாதனை

திருப்பத்தூரை சேர்ந்த கதிர் (30) என்ற இளைஞர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். இவர் யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் ப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமையில் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

36 மணி நேரம், 10,000 வரிகள் - நடிகர் விஜய்க்காக உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்! | Poem In 10000 Lines For Vijay A World Record

அவர் நடிகர் விஜய்க்காக கடந்த 16-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கி 17-ம் தேதி இரவு 11 மணி வரை மொத்தமாக 36 மணி நேரத்தில் சுமார் 10,000 வரிகளில் ஒரு முழு கவிதையை எழுதி உலக சாதனை படைத்துள்ளார். இதற்காக கதிருக்கு 2 விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.