திலகபாமா நீக்கம்; ராமதாஸ், அன்புமணி அடுத்தடுத்து அறிவிப்பு - யார் பொருளாளார்?
திலகபாமா பாமக பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
திலகபாமா நீக்கம்
அன்புமணி தலைமையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இதற்கிடையில், பாமக பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் பாமகவின் புதிய பொருளாளராக சையத் மன்சூர் உசேனை நியமித்துள்ளார்.
அன்புமணி அறிவிப்பு
தொடர்ந்து, பாமகவில் 25 மாவட்டச் செயலாளர்களை மாற்ற அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அன்புமணி நடத்திய கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி. திலகபாமா அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் அறிவித்துள்ளார்.