என்னது ,மறுபடியுமா ? பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக், ட்விட்டர் பதிவால் பரபரப்பு
பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட பிறகு, #Hacked என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு இன்று சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
ஆனால், மிக விரைவாக இது சரி செய்யப்பட்டு விட்டதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமரின் ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் பதிவில் , இந்தியா அதிகாரப்பூர்வமாக பிட்காயினை சட்டப்பூர்வ ஏற்றுக்கொண்டது என்றும் ,அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அரசு பிட்காயினை அனைத்து குடிமக்களுக்கும் விநியோக்கிகும் " என்று ஹேக் செய்யப்பட்ட கணக்கிலிருந்து ட்வீட் செய்யப்பட்டது.
இந்த ட்விட் தற்போது பிரதமரின் ட்விட்டர் பதிவில் இருந்து நீக்கப்பட்டது , ஏற்கனவே கடந்த 2020 செப்டம்பரில் பிரதமர் மோடியின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்ட போது கிரிப்டோகரன்சி மூலம் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு மக்களிடம் கூறுமாறு இருந்தது குறிப்பிடத்தக்கது.
The Twitter handle of PM @narendramodi was very briefly compromised. The matter was escalated to Twitter and the account has been immediately secured.
— PMO India (@PMOIndia) December 11, 2021
In the brief period that the account was compromised, any Tweet shared must be ignored.