ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றி - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

Narendra Modi India ISRO
By Jiyath Sep 02, 2023 01:55 PM GMT
Report

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆதித்யா எல்-1 

நிலவை தொடர்ந்து, சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை வடிவமைத்தது இஸ்ரோ. இன்று 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றி - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து! | Pm Narendra Modi Congratulate Isro Scientists

பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

தற்போது ஆதித்யா எல்-1 விண்கலம், புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்தியா சார்பில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடி

இந்நிலையில் ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ' சந்திரயான் -3 யை தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியி இந்தியாவின் பயணம் வெற்றியுடன் தொடர்கிறது.

ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றி - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து! | Pm Narendra Modi Congratulate Isro Scientists

சூரியனை ஆய்வு செய்வதில் இந்தியாவின் முதல் முயற்சியாக ஆதித்யா எல்.1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என் பாரட்டுகள். இப்படியான தொடர் முயற்சிகள் மூலம் மானுடத்தின் வளர்ச்சிக்காக பிரபஞ்சம் குறித்த புரிதல்களுக்கு வழிவகுக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.