பிரதமர் மோடி போட்டோ தேவையே இல்லை : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
சுப்ரீம் கோர்ட்டின் இ-மெயில் அட்ரஸில் பிரதமர் மோடியின் படத்தை நீக்கிவிட்டு, உச்சநீதிமன்ற படத்தை மாற்றி வைக்க உத்தரவிட்டுள்ளது பொதுவாக அரசியல் கட்சியினர் விளம்பர பிரியர்கள்தான். தங்கள் கட்சியின் சின்னம், கொடி முதல் அனைத்தையும் விளம்பரப்படுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள் என்பது நான் அறிந்ததே,
அந்த வகையில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் அதாவது இமெயில் முகவரியில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கப்பட்டு நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக வாசகங்களும் அதில் இருந்தன.
Supreme Court was informed that a snapshot of "sabka sath sabka vikas & picture of PM Modi was being appended at the foot of official emails. #SupremeCourt directed National Informatics Centre to drop the image and use a pic of SC instead @PMOIndia pic.twitter.com/8BPfSDLLIE
— Bar & Bench (@barandbench) September 24, 2021
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு வந்துள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரியிலிருந்து பிரதமர் மோடியின் போட்டோ மற்றும் வாசகங்களை நீக்க உடனடியாக தேசிய தகவல் மையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இ-மெயிலில் பிரதமர் மோடியின் போட்டோ இருந்த இடத்தில், சுப்ரீம்கோர்ட்டின் போட்டோவை வைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.