Friday, May 9, 2025

இந்தியாவுக்கு வந்த அழைப்பு.. பாகிஸ்தான் சொல்கிறாரா பிரதமர் மோடி?

Narendra Modi Pakistan India
By Vidhya Senthil 8 months ago
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

பிரதமர் மோடி

பாகிஸ்தான் தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு அக்டோபர் 15,16 ஆகிய தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கிறது.

இந்தியாவுக்கு வந்த அழைப்பு.. பாகிஸ்தான் சொல்கிறாரா பிரதமர் மோடி? | Pm Modi Visit Pakistan To Attend Sco Summit

பாகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் உறுப்பு நாடுகளின் அனைத்து அரசாங்கத் தலைவர்களுக்கும்,  அனைத்து அரசாங்கத் தலைவர்களுக்கும், அரசாங்கத் தலைவர்களின் கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

  அந்த வகையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா அதில் பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

 

நாடே மணிப்பூர் மாதிரி ஆகிடும்....மீண்டும் மோடி வந்தால்! எச்சரிக்கும் நிர்மலா சீதாராமன் கணவர்

நாடே மணிப்பூர் மாதிரி ஆகிடும்....மீண்டும் மோடி வந்தால்! எச்சரிக்கும் நிர்மலா சீதாராமன் கணவர்

 பாகிஸ்தான் அழைப்பு

மேலும் அக்டோபரில் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கிடையே நிதி, பொருளாதார, சமூக கலாச்சார மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் குறித்த ஆலோசனை நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு வந்த அழைப்பு.. பாகிஸ்தான் சொல்கிறாரா பிரதமர் மோடி? | Pm Modi Visit Pakistan To Attend Sco Summit

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி இந்தியா தலைமையில் நடந்த எஸ்சிஓவின் மாநாட்டில் காணொளி வாயிலாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஹெரிப் கலந்துகொண்டார்.

அதே ஆண்டில் கோவாவில் நடந்த எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ நேரடியாகக் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.