பகையும் கிடையாது உறவும் கிடையாது - தமிழகம் வரும் பிரதமர் மோடி , பாதுகாப்பு ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரம்
தமிழகத்தில் புதிதாக கட்டப்படுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக ஜனவரி 12-ம் தேதி மதுரை வருகிறார் பிரதமர் மோடி. அங்கிருந்து அவர் விருதுநகர் செல்வதற்கான முன்னேற்பாடுகளை பிரதமர் அலுவலகமும் தமிழக அரசும் செய்து வருகிறது.
இதனிடையே, பிரதமரின் தமிழக வருகை குறித்த நிகழ்ச்சியை பகையும் இல்லை, உறவும் இல்லை என்கிற ரீதியிலேயே திமுக கருதுகிறதாம். பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு இந்தமுறை கடந்தகாலங்களை போல திமுக எதிர்க்காது என கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதுரையில் ஜனவரி 12-ல் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் . அதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜக அரசு மேற்க்கொண்டு வருகிறது.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மோடியுடன் அவர் ஒன்றாக ஒரே மேடையில் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் மருத்துவக் கல்லூரி திறப்பு விழா நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.