ஜி 20 மாநாடு..15 நாட்டுத் தலைவர்கள்..இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி..!!
நாளை வரை நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 15 சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்ட்டை நடத்தவுள்ளார்.
ஜி 20 மாநாடு
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியா ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பிற்கு தலைமை பொறுப்பெற்ற பிறகு பல்வேறு ஜி 20 நாடுகளின் கூட்டம் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு இரண்டு நாட்கள் இந்திய தலைநகர் டெல்லியில் நடத்தப்படவுள்ளது.
இதில் உலகின் பல தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற முக்கிய நாட்டின் பிரதமர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வந்து கொண்டிருக்கிறார்கள்.
15 நாடு தலைவர்கள்..இருதரப்பு பேச்சுவார்த்தை
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர்களுடன் இந்திய பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.அதில், இன்று அதாவது, செப்.8 ஆம் தேதி மொரீசியஸ், வங்கதேசம், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் மோடி பேசவுள்ளார். அதனை தொடர்ந்து நாளை சனிக்கிழமை செப்.9 ஆம் தேதி, ஜி-20 மாநாட்டில் இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அடுத்த நாள் செப்.10 ஆம் தேதி மதிய உணவு வேளையில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுயேல் மேக்ரானை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதனை தொடர்ந்து, கோமோரோஸ், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியா, ஐரோப்பிய யூனியன், பிரேசில் மற்றும் நைஜீரியா நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ-வுடன் தனிப்பட்டமுறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.