எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கின்றனர்: பிரதமர் மோடி (வீடியோ)
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
அதில், எனது ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது, உலக வளர்ச்சியில் இந்தியா தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனுடன் செய்த ஒப்பந்தத்தை உலக நாடுகள் வரவேற்றுள்ளன, வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுபவர்கள் நாட்டின் வளர்ச்சியை பற்றி சிந்திக்க மாட்டார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் கடனில் மூழ்கியிருந்தன, வாராக்கடன் அதிகமாக இருந்தது, தற்போது வாராக்கடன் ஒரு சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது, ஆட்சியில் இருந்த கட்சி தங்கள் பாக்கெட்டுகளை மட்டுமே நிரப்பியுள்ளன என தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்ததால் எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கின்றனர், இது வெறும் கோஷம் மட்டுமல்ல, என் மீதான வெறுப்பு, என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.