பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை, சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு
Narendra Modi
Chennai
By Irumporai
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை தருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
அவர் தனது பயணத்தின் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இந்த நிலையில் நாளை பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னை காவல் ஆணையர் தலைமையில் 5 கூடுதல் ஆணையர்கள், 8 இணை ஆணையர்கள், 29 துணை ஆணையர்கள் உட்பட 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும் பிரதமர் வருகையோட்டி டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது