"உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள்” - பிரதமர் மோடி தை திருநாள் வாழ்த்து

tamil people pongal wishes pm modi
By Swetha Subash Jan 14, 2022 04:20 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழர்களின் பெருமைமிகு தனிச்சிறப்புகளில் ஒன்று தான் தைப்பொங்கல் திருநாள் ஆகும்.

அதனால் தான் இத்திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயர் உருவானது.

அதுமட்டுமின்றி இந்நன்னாளில் இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதுடன், தமிழர்கள் வீடுகளில் தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

அதில், “ தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாவதற்கு நான் பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.