பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டம் இன்று காலை தொடங்கியது - பிரதமர் மோடி பங்கேற்பு
டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பாஜக-வின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டம் இன்று காலை தொடங்கியது.
இதில் பங்கேர்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அம்பேத்கர் பவன் வந்தார்.
மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக-வின் தேசிய தலைவர் ஜே பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், பாஜக வெற்றி பெற்ற தொகுதிகள் மற்றும் தோல்வியடைந்த இடங்கள் பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என எதிர்பார்க்க படுகிறது.
மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த கூட்டத்தொடரில் பங்குக்கொள்ளும் பாஜக எம்.பிக்களின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை பற்றியும் ஆலோசனை செய்யப்பட உள்ளது.
அதேபோல், ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், அது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.