நெற்றியில் நாணயம் வைத்து குட்டீஸை ஏமாற்றிய பிரதமர் மோடி - இணையத்தை கலக்கும் Video!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி குழந்தைகளுடன் குறும்புத்தனமாக விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி ஜார்கண்ட் மாநிலத்திற்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பழங்குடியின மக்களின் அடையாளம் எனக் கூறப்படும் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் ராஞ்சியிலுள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் மோடியை சந்திக்க குழந்தை ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் மோடி கலகலப்பாக பேசி, குறும்புத்தனமான விளையாடினார்.
போலீசார் பணியிடை நீக்கம்
மேலும், தனது நெற்றியில் நாணயம் ஒன்றை வைத்து அதை மறைய வைப்பது போல் குழந்தைகளை ஏமாற்றி பிரதமர் மோடி மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ அவரின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. முன்னதாக பிரதமர் மோடியின் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பெண் ஒருவர் அவரது கான்வாயில் நுழைந்தார். இதனால் சிறுது நேரம் அங்கு பதற்றம் நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
बच्चों के साथ बच्चे बन जाते हैं मोदी जी... pic.twitter.com/UUOXT5oouX
— BJP (@BJP4India) November 16, 2023