முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கேரளா மாநில முன்னான் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்.
உம்மன் சாண்டி காலமானார்
காங்கிஸ் மூத்த தலைவரும் கேரளா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சாண்டி (வயது 79) இன்று உடல் நலக்குறைவால் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது மறைவிற்கு தற்போதைய கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கேரளா மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் மோடி முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேரளாவின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை பொதுவாழ்விற்காக அர்ப்பணித்த பணிவான நபரை நாம் இழந்துவிட்டோம்.
நான் குஜராத் முதலமைச்சராக இருந்த போது அவர் கேரளா மாநில முதலமைச்சராக செயல்பட்ட போது தான் எங்கள் சந்திப்பு நடந்தது.
இந்த சோகமான நேரத்தில் எனது இரங்கலை உம்மன் சாண்டி குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
In the passing away of Shri Oommen Chandy Ji, we have lost a humble and dedicated leader who devoted his life to public service and worked towards the progress of Kerala. I recall my various interactions with him, particularly when we both served as Chief Ministers of our… pic.twitter.com/S6rd22T24j
— Narendra Modi (@narendramodi) July 18, 2023