எழுதி கொடுங்கள்.. நான் உயிரோடு இருக்கும் வரை இது நடக்காது - சவால் விட்ட பிரதமர் மோடி!

BJP Narendra Modi Gujarat India Lok Sabha Election 2024
By Jiyath May 02, 2024 02:40 AM GMT
Report

அரசியலமைப்பு பெயரில் இட ஒதுக்கீடு விளையாட்டை விளையாட நான் அனுமதிக்கமாட்டேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா என்ற இடத்தில் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது "காங்கிரஸ் கட்சி, அதன் கூட்டணி கட்சிகள் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தமாட்டோம்,

எழுதி கொடுங்கள்.. நான் உயிரோடு இருக்கும் வரை இது நடக்காது - சவால் விட்ட பிரதமர் மோடி! | Pm Modi Challenged To Rahul Gandhi

அல்லது அரசியலைப்போடு விளையாடமாட்டோம் அல்லது மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கமாட்டோம் என அறிவிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியின் இளவரசருக்கு (ராகுல் காந்தி) சவால் விடுகிறேன்.

காங்கிரஸ் அழிகிறது.. பாகிஸ்தான் அழுகிறது; இதுதான் காரணம் - பிரதமர் மோடி தாக்கு!

காங்கிரஸ் அழிகிறது.. பாகிஸ்தான் அழுகிறது; இதுதான் காரணம் - பிரதமர் மோடி தாக்கு!

கவனமாக கேளுங்கள் 

மதம் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என காங்கிரஸ் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். இது மோடி என்பதை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கவனமாக கேட்க வேண்டும். 

எழுதி கொடுங்கள்.. நான் உயிரோடு இருக்கும் வரை இது நடக்காது - சவால் விட்ட பிரதமர் மோடி! | Pm Modi Challenged To Rahul Gandhi

நான் உயிரோடு இருக்கும் வரை, அரசியலமைப்பு பெயரில் இட ஒதுக்கீடு விளையாட்டை விளையாட நான் அனுமதிக்கமாட்டேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.