வினாத்தாள் கசிவு வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றம்: மோடி அறிவிப்பு

Narendra Modi India
By Vinoja Jul 23, 2026 10:59 AM GMT
Report

நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பதிவு

இளைஞர்களின் நலனும் எதிர்காலமுமே அரசின் முதன்மை என்பதைக் குறிப்பிட்ட அவர், தேர்வுத் தாள் கசிவில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான மற்றும் விரைவான தண்டனை வழங்கப்படும்.

வினாத்தாள் கசிவு வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றம்: மோடி அறிவிப்பு | Pm Modi Announces Fast Track Courts For Neet

மேலும், மாணவர்களின் நலனைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பை வரவேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், விரைவு நீதிமன்றங்கள் மூலம் குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், இளைஞர்களின் எதிர்காலத்தில் எந்தவித சமரசமும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.