அண்ணாமலைக்கு நல்ல ஜாதி பின்னணி இருக்கு - பிரதமர் மோடி பேச்சால் வெடிக்கும் சர்ச்சை!
பிரதமர் மோடி அண்ணாமலை குறித்து பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தனியார் சேனல் ஒன்றிற்கு சிறப்பு நேர்காணலை வழங்கி இருந்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பாஜக, ஜன சங்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுதான் செயல்படுகிறது.
தமிழ்நாடு பாஜகவில் பல தலைமுறை தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தற்போது அண்ணாமலையும் தமிழ்நாடு பாஜகவில் பணியாற்றுகிறார். தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியவராக இருக்கிறார்.
வெடிக்கும் சர்ச்சை
குறிப்பாக இளைஞர்களிடம் கவனம் பெற்றவராக இருக்கிறார். நல்ல போலீஸ் அதிகாரி வேலையை உதறிவிட்டு பாஜகவில் கட்சிப் பணியாற்ற இணைந்தவர். அவருக்கு நல்ல ஜாதிப் பின்னணியும் உள்ளது. சிறப்பான உழைப்பாளி. ஆனால் அரசியலில் சம்பாதிக்க வேண்டும் என நினைத்திருந்தால் திமுகவில்தான் சேர்ந்திருப்பார்.
ஆனால் மக்களுக்காக பாடுபட பாஜகவில் இணைந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
இதில், அண்ணமலைக்கு நல்ல ஜாதிப் பின்னணி இருக்கிறது என நாட்டின் பிரதமரான மோடியே குறிப்பிடுவது தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரியதாகியுள்ளது.