உதயநிதி கூறியதன் முழு அர்த்தம் புரியாமல் பிரதமர் பேசுகிறார்....முக ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி பேசியதன் முழு அர்த்தம் புரியாமல் பிரதமர் மோடி பேசுவதா ..? என முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
முக ஸ்டாலின் கேள்வி
சனாதன விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி பேசியதன் முழு அர்த்தம் புரியாமல் பிரதமர் மோடி பேசுவதா ..? என கேள்வி எழுப்பிய முக ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் பெண்களுக்கு எதிரான சனாதன கோட்பாடு குறித்து தான் அமைச்சர் பேசினார் என தெரிவித்துள்ளார்.
எந்த மதத்தையும், மத நம்பிக்கையையும் புண்படுத்தும் வகையில் அமைச்சர் உதயநிதி பேசவில்லை என சுட்டிக்காட்டிய அவர், சனாதனம் என்ற சொல்லை வைத்து பெண் இனத்தை, அடிமைப்படுத்த நினைப்பதை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என் உதயநிதி சொன்னார் என தெளிவுப்படுத்தினார்.
அமைச்சர் உதயநிதிதியின் கருத்தை, இன படுகொலை செய்ய சொன்னதாக திரித்து பாஜகவினர் பொய்யாக பரப்புகின்றனர் என குற்றம்சாட்டி, பாஜகவிற்கு வந்திருப்பது சனாதனம் மீதான ஈடுபாடு அல்ல, இந்தியா கூட்டணிக்கு விரிசல் அரசியல் கணக்கு என விமர்சனம் செய்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.
மணிப்பூர், சிஏஜி பற்றி பேசவில்லை
திமுக மீது களங்கம் கற்பிக்கும் அரசியல் செய்ய நினைத்தால் அந்த புதைகுழியில் பாஜக மூழ்கும் என்றும் மணிப்பூர் பற்றியோ, சிஏஜி அறிக்கையில் வெளிவந்த முறைகேடுகள் பற்றியோ பிரதமரும், மத்திய அமைச்சர்களும் பேசவில்லை என தெரிவித்துள்ளார்.
ஆனால் சனாதனம் குறித்து பேசினால் உரிய பதிலடி கொடுக்குமாறு பிரதமர் பேசியிருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இனப்படுகொலை என உதயநிதி பேசாத நிலையில், அவ்வாறு பேசியதாக ஒன்றிய அமைச்சர்கள் பாஜக முதல்வர்கள் பொய் பரப்புகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
