மனைவியுடன் தேனிலவா? தயவு செய்து அப்படி போட்ராதீங்க டா - ரவீந்தர் மகாலட்சுமி
தயவு செய்து அப்படி போட்ராதீங்க டா..என ரவீந்தர் மகாலட்சுமி இன்ஸ்டா பதிவை வெளியிட்டுள்ளார்.
திருமணம்
தொகுப்பாளராக அறிமுகமான மகாலட்சுமி சின்னத்திரையிலும் நடிகையாக வலம் வருகிறார். மகாலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் குறித்த பதிவுகள்தான் சோசியல் மீடியாவின் அதிகம் பேசப்பட்டு வருகிறது. மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில் அவருக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரின் திடீர் திருமணம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
குல தெய்வ வழிபாடு
தன் காதல் மனைவி மகாலட்சுமியுடன் விமானத்தின் முன்னிற்று போஸ் கொடுத்த ரவீந்தர் குல தெய்வ வழிபாட்டுக்காக சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் விமானத்திற்கு முன்பு மனைவி மகாலட்சுமியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தயாரிப்பாளர் ரவீந்தர் தன் மனைவியுடன் தனி விமானத்தில் தேனிலவுக்காக பெலீஸில் இருக்கும் தீவுக்கு சென்றார். தயவு செய்து அப்படி போட்ராதீங்க டா... திருச்சி பக்கத்துல டால்மியாபுரம் கிட்ட குலதெய்வ கோவிலுக்கு போறேன். செஞ்சிடாதீங்கடா இந்த புகைப்பட ஸ்க்ரிப்ட்ட என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அந்த புகைப்படத்தை போட்டோஷாப் செய்து ரவீந்தர் தன் மனைவியுடன் தேனிலவுக்கு துபாய் சென்றிருக்கிறார் என்று சமூக வலைத்தளத்தில் வதந்தி பரபரப்பி வருகின்றனர்.
தன் மனைவியுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டு வருகிறார் ரவீந்தர். மகாலட்சுமி கொடுத்து வைத்தவர் இப்படி மனைவியை கொண்டாடும் கணவர் கிடைத்திருக்கிறார்.
மகா திருச்சி பெண்ணு. நல்லா பார்த்துக்கோங்க அண்ணா என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் இனி பேட்டி கேட்டு யாரும் தங்களை கேட்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.