சிக்ஸர் அடித்ததால் ஆத்திரம்; மைதானத்தில் தாக்கிக்கொண்ட வீரர்கள் - வைரலாகும் வீடியோ
வங்கதேசத்தில், வளர்ந்து வரும் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 4 நாள் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
2வது டெஸ்ட் போட்டியின், 2வது நாளில் தென்னாப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ட்செபோ ந்டுலி, வீசிய பந்தில் வங்கதேச வீரர் ரிப்பன் மொண்டோல் சிக்ஸர் அடிப்பார்.
மைதானத்தில் மோதல்
மொண்டோல், சக பேட்ஸ்மேன் மெஹிடி ஹசனை நோக்கி நடந்து சென்றபோது, ரிப்பன் நுடுலியை பார்த்துக்கொண்டார்.
அப்போது நுடுலி, மொண்டோலின் ஹெல்மெட்டை பிடித்து கொண்டு அவரை தாக்க தொடங்கினார். பதிலுக்கு மொண்டோழும் தாக்க முயல்வார்.
மைதானத்தில் இருந்த நடுவர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். தென்னாப்பிரிக்கா வீரர்கள் சமாதானம் செய்வதற்கு பதிலாக, ந்டுலியை, மொண்டோல் நோக்கி தள்ளினர்.
I have never seen such an incident in the history of cricket. A direct fight. What a shameful incident of cricket happened between the talented bowler Shepo Ntuli of South Africa and Ripon Mondal of Bangladesh. This is extreme. #BANevsSAe #CricketTwitter #Bangladesh #SouthAfrica pic.twitter.com/3CbMTHwUEA
— Monirul Ibna Rabjal 🇧🇩🇪🇺 (@to2monirul) May 28, 2025
இந்த விவகாரம் குறித்து, வங்கதேச மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்திடம் நடுவர்கள் அறிக்கை அளித்த பின்னர், வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியில், வங்கதேச வீரர் ஜிஷான் ஆலம் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஆண்டிலே சிமெலேன் மோதிக்கொண்டதால், இடைநீக்கம் செய்யப்பட்டனர்.