'நீ பாதி நான் பாதி கண்ணே' - திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

Tamil Cinema Death
By Jiyath May 02, 2024 04:21 AM GMT
Report

திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் தனது 69 வயதில் காலமாகியுள்ளார்.

உமா ரமணன்

இளையராஜா இசையமைத்த 'நிழல்கள்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'பூங்கதவே தாழ் திறவாய்' என்ற பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் உமா ரமணன். தொடர்ந்து கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு,

வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், தென்றலே தென்றலே என்னை தோடு, திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார்.

நல்ல அப்பா இல்ல; உங்க கடைசி பொண்ணு.. - ஷகிலாவின் பேச்சால் கடுப்பான பயில்வான்!

நல்ல அப்பா இல்ல; உங்க கடைசி பொண்ணு.. - ஷகிலாவின் பேச்சால் கடுப்பான பயில்வான்!

காலமானார் 

மேலும், எம்.எஸ்.வி, இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களின் பாடல்களை உமா ரமணன் பாடியுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நிலை குன்றியிருந்த அவர், தனது 69 வயதில் நேற்று காலமாகியுள்ளார்.

உமா ரமணனின் மறைவால் திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உமா ரமணன் இறுதிச் சடங்குகள் சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.