Monday, Jun 23, 2025

மகா கும்பமேளாவில் நீராடிய பிரகாஷ் ராஜ்? வைரலான photos - கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!

Uttar Pradesh India Festival Viral Photos
By Vidhya Senthil 5 months ago
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

   மகா கும்பமேளாவில் பிரகாஷ் ராஜ் நீராடியதாக இணையத்தில் புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மகா கும்பமேளா

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.அந்த வகையில் இந்தாண்டு மகா கும்பமேளா ஜனவரி 12ஆம் தேதி தொடங்கியது. மேலும் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும்.

[

இந்த பிரம்மாண்ட திருவிழாவில் முனிவர்கள், துறவிகள், பாபாக்கள், அகோரிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல கோடி பக்தர்கள் கலந்துகொண்டனர்.மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் மகா கும்பமேளாவில் பிரகாஷ் ராஜ் நீராடியதாக இணையத்தில் புகைப்படங்கள் வைரலானது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கடவுள் மீது நம்பிக்கை இல்லாத இந்து வெறுப்பாளர் பிரகாஷ் ராய், கும்பமேளாவை அசுத்தப்படுத்தச் சென்றுள்ளார்.

பிரகாஷ் ராஜ்

மாசு என்றால் என்ன என்று இப்போது எனக்குப் புரிகிறது என்று கருத்து தெரிவித்தனர்.இதற்கிடையே, ஏஐ தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது என ஊடகங்களும் தெரிவித்திருந்தன. இது குறித்து பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் புனிதமான நிகழ்வில்கூட மதவெறியர்கள் கடைசியாகப் போலியான செய்திகளைப் பரப்புகிறார்கள்.இதற்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.