வெள்ள நீரில் நடைபெற்ற காதல் திருமணம் - பிலிப்பைன்ஸ்'ஸில் ருசிகரம்..!
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடும் புயல் காரணமாக அம்மாநிலத்தில் பெரும் புயல், வெள்ளப்பெருக்கு போன்றவை ஏற்பட்டுள்ளது.
இணையத்தில் வைரல்
டோக்சுரி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் அந்நாட்டின் பல மாகாணங்களில் கனமழை கொட்டி வருகிறது. பிலிப்பைன்ஸ் நாடே பெரும் இன்னலை சந்தித்து வரும் நிலையில்,
அந்நாட்டில் காதல் ஜோடி ஒன்று வெள்ள நீரிலும் மிதந்து சென்று தங்களது திருமணத்தை முடித்துள்ள சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாலொலொஸ் மாகாணத்தில் பராசோயின் தேவாலயத்தில் டியான் விக்டோரியானோ என்ற பெண்ணும், பாவ்லோவை என்ற தனது காதலரை சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
தடுத்து நிறுத்திட முடியாது
கனமழை காரணமாக அந்த தேவாலயம் முழுக்க நேரில் முழ்கினாலும், தங்களது திருமணத்தை முடிவு செய்த தேதியில், கடும் இன்னல்களுக்கு மத்தியில் இந்த காதல் ஜோடி நடத்தி முடித்துள்ளது.
இது குறித்தான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக, காதல் ஜோடிகளுக்கு இணையதளவாசிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காதலை மழையோ, புயலோ, எதுவும் தடுத்து நிறுத்திட முடியாது என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.