இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை; ஆனால் சில நிபந்தனைகள் - பிலிப்பைன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுற்றுலா வர விசா தேவை இல்லை என பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ்
தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், தங்களது சுற்றுலாதுறையை மேம்படுத்தும் வகையில், இந்தியர்களுக்கு விசா இல்லாத கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி,14 நாள் விசா மற்றும் 30 நாள் விசா என்ற 2 புதிய விசா இல்லா வசதிகள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன. இந்த விசா கொள்கை 2025 மே முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
ஆனால் இந்த விசாவிற்கு பல்வேறு நிபந்தனைகளை பிலிப்பைன்ஸ் அரசு முன் வைத்துள்ளது.
14 நாள் விசா
இதில் விசா இல்லாமல், இந்தியர்கள் 14 நாட்கள் பிலிப்பைன்ஸில் இருக்கலாம்.
அதேவேளையில், இந்த விசா சுற்றுலாவுக்காக மட்டும் இருக்க வேண்டும் தங்குவதற்கான ஹோட்டல் முன்பதிவுகள் விவரங்கள், தங்குவதற்கு போதுமான நிதி ஆதாரம், திரும்ப செல்வதற்கான டிக்கெட் ஆகியவற்றை முன்னதாக சமர்பிக்க வேண்டும்.
30 நாட்கள் விசா
இதன்படி 30 நாட்கள் பிலிப்பைன்ஸில் தங்க முடியும்.
அதேவேளையில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் அல்லது ஷெங்கன் பகுதி நாடு போன்ற நாடுகளில் செல்லுபடியாகும் விசா அல்லது நிரந்தரக் குடியிருப்பு அனுமதியை வைத்திருக்கும் இந்திய குடிமக்கள் 30 நாட்கள் பிலிப்பைன்ஸில் தங்க முடியும்.
இந்த இரு விசா சலுகைகளையும் பயன்படுத்த முடியாத இந்தியர்களுக்கு, பிலிப்பைன்ஸ் அரசு இ-விசாக்களை வழங்குகிறது.