பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தப்பிச் சென்ற இளைஞர்கள் - வைரலாகும் சிசிடிவி காட்சி

Viral youth petrol Escaped Without paying CCTV display
By Nandhini Feb 07, 2022 06:44 AM GMT
Report

பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் இளைஞர்கள் தப்பி சென்ற வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை அருகே, கே.என்.ஜி புதூர் அருகே உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணி புரிபவர் பிரபாகரன். இவர் நேற்று இரவு 9.50 மணிக்கு வந்த இளைஞர்கள் ரூ.800க்கு பெட்ரோல் போடும்படி கூறி இருக்கிறார்கள். இதனையடுத்து, அவர் பெட்ரோல் போட்டுள்ளார்.

இதனையடுத்து, போட்ட பெட்ரோலுக்கு பணம் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், அந்த இளைஞர்கள் இருவரும் பணம் கொடுக்காமல் அங்கிருந்து பைக்கில் தப்பி செல்ல முயற்சி செய்துள்ளனர்.

இதனைக் கண்ட பிரபாகரன் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞரின் கையை பிடித்து தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். அப்போது, அவர் நிலைதடுமாறி அருகிலிருந்த தடுப்பில் மோதி காயமடைந்தார்.

இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் போட்டு விட்டு பணம் கொடுக்காமல் இளைஞர்கள் தப்பி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தப்பிச் சென்ற இளைஞர்கள் - வைரலாகும் சிசிடிவி காட்சி | Petrol Without Paying Escaped