பெட்ரோல் பங்க் ஊழியரின் சாதூர்ய செயலால் கொள்ளை கும்பலிலிருந்து தப்பிய குடும்பம் - குவியும் பாராட்டு

employee petrol-punk robbery-gang surviving-family
By Nandhini Apr 08, 2022 12:11 PM GMT
Report

பெட்ரோல் பங்கில் அடிக்கடி கொள்ளை, தாக்குதல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில்,  தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது-

அந்த வீடியோவில், ஒரு நபர் தனது காரில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டிருக்கிறார். அப்போது, மற்றொரு வேனில் இருந்து திருடர்கள் குழு ஒன்று கொள்ளையடிக்க அங்கு ஓடிவந்தது. அப்போது, பெட்ரோல் பங்க் ஊழியர் இதை சட்டென்று புரிந்து கொண்டு, தனது மூளையைப் பயன்படுத்தி, கொள்ளை கும்பல் மீது பெட்ரோல் தெளித்து ஓட விடுகிறார். ஊழியரின் சாதூர்ய திறமையால் ஒரு குடும்பம் கொள்ளை கும்பலிடமிருந்து தப்பியுள்ளது. 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சாதூர்யமாக செயல்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.