இனிமேல் பெட்ரோல் டீசல் விலை தினமும் அதிகரிக்கும் : ராகுல் காந்தி
இனி,பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மீண்டும் ரூ.0.8, ரூ.0.3 என உயரத்தொடங்கும் என ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் :
பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மீண்டும் ரூ.0.8, ரூ.0.3 என உயரத்தொடங்கும். மத்திய அரசு மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும்.
Petrol Prices
— Rahul Gandhi (@RahulGandhi) May 22, 2022
May 1, 2020: ₹69.5
Mar 1, 2022: ₹95.4
May 1, 2022: ₹105.4
May 22, 2022: ₹96.7
Now, expect Petrol to see ‘Vikas’ in daily doses of ₹0.8 and ₹0.3 again.
Govt must stop fooling citizens. People deserve genuine relief from record inflation.
2020-ஆம் ஆண்டு மே மாதம் ரூ.69-க்கு விற்பனையான பெட்ரோல் விலை தற்போது ரூ.96.7-க்கு விற்பனையாகிறது.’ என பதிவிட்டுள்ளார்.