இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயித்து அந்நாட்டு அரசு உத்தரவு - விலை எவ்வளவுன்னு தெரியுமா? இதோ
இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
அந்நாட்டுக்கு உதவிடும் வகையில் எரிபொருள் வாங்குவதற்கு இந்தியா கடந்த பிப்ரவரி மாதம் ரூ.3 ஆயிரத்து 750 கோடியும்,கடந்த மாதம் அதே தொகையும் இந்தியா கடனாக வழங்கியது. ஏற்கனவே, பல தவணைகளாக பெட்ரோல், டீசலை இந்தியா அனுப்பி வைத்தது. கடந்த 21-ந் தேதி 40 ஆயிரம் டீசல் இந்தியா வழங்கியது.
இந்தியா மேலும் 40 ஆயிரம் டன் பெட்ரோலை கப்பல் மூலம் அனுப்பி வைத்தது. தற்போது, அந்தக் கப்பல் நேற்று முன்தினம் கொழும்பு சென்றடைந்ததாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.450 ரூபாயாகவும், டீசல் விலை ரூ.400 ஆகவும் நிர்ணயம் செய்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை IBC Tamil
சிறை காவலர்களின் தலைகள் மீது பெரிய கற்களால் தாக்கிய கைதிகள் : வெளிவரும் திடுக்கிடும் தகவல் IBC Tamil
கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் IBC Tamil