சிறையிலிருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதியளிக்க வேண்டும் - நீதிமன்றத்தில் மனு!

Delhi India Arvind Kejriwal
By Jiyath Apr 17, 2024 03:00 PM GMT
Report

சிறையில் இருந்தபடியே ஆட்சி செய்ய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையிலிருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதியளிக்க வேண்டும் - நீதிமன்றத்தில் மனு! | Petition In High Court Kejriwal To Rule From Jail

இந்நிலையில் சிறையில் இருந்தபடியே ஆட்சி செய்ய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஊடக நிறுவனங்களில் கெஜ்ரிவாலின் ராஜினாமா மற்றும் டெல்லியில் ஜனநாயக ஆட்சியை அமல்படுத்துவது போன்ற செய்திகள் வெளியாவதை கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும்.

கோரிக்கை 

கோரிக்கை மேலும், அரவிந்த கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்தபடி காணொலி வாயிலாக அமைச்சரவை கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறையிலிருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதியளிக்க வேண்டும் - நீதிமன்றத்தில் மனு! | Petition In High Court Kejriwal To Rule From Jail

மேலும், சிறையிலிருந்து ஆட்சி செய்ய முதலமைச்சருக்கோ, பிரதமருக்கோ அரசமைப்பு சட்டத்தில் எவ்வித தடையும் இல்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.