பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி உடற்கல்வி ஆசிரியர் செய்த காரியம் - அதிர்ச்சி தகவல்

Ranipet petteacherarrested schoolstudentssexualabuse
By Petchi Avudaiappan Mar 24, 2022 06:16 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

ராணிப்பேட்டை அருகே பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் காரை கூட்ரோடு பகுதியில் அரசு சமூக நல பாதுகாப்பு துறை சார்பில் நடத்தப்படும் சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் பள்ளி இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கே சிறுவர்கள் முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்கிப் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில்  பல்வேறு துறை சார்ந்த ஆண், பெண் என இருபால் ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். அதிகப்படியான மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இதனிடையே இந்தப் பள்ளியில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு பள்ளியில் சேர்ந்த நிலையில் அங்கு பயிலும் மாணவர்களுக்கு பாலியல் தொடர்பான தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

கிட்டதட்ட 14 ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் உள்ள 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களை இவர் கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் சில மாணவர்கள் மிகுந்த மன அழுத்தம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் சில மாணவர்கள்  பள்ளி காப்பாளர் விஜயகுமாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவர்களின் நலன் கருதி காப்பாளர் விஜயகுமார் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.  புகாரின் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.