நிதி நிறுவன மோசடி - பெரியார் பல்கலை..துணைவேந்தர் மீது 8 பிரிவுகளில் வழக்கு..!!நிபந்தனை ஜாமீன் வழங்கல்

Tamil nadu Salem
By Karthick Dec 27, 2023 06:27 AM GMT
Report

மோசடியில் ஈடுபட்டதாக கைதான பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் மீது 8 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

துணைவேந்தர் கைது

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன். பூட்டார் என்னும் தனியார் பவுண்டேஷன் நிறுவனத்தை துவங்கியுள்ள இவர், அந்நிறுவனத்தில் பல்வேறு நபர்களை பங்குதாரர்களாகவும் இணைத்துள்ளார்.

periyar-university-vice-chancellor-arrested

அந்நிறுவனத்தின் மூலம் அரசின் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக இவர் மீது பல்கலைகழகத்தின் தொழிலாளார் நலச்சங்க ஆலோசகர் இளங்கோவன் கருப்பூர் காவல்நிலையத்தில் ஜெகநாதன் மீது புகார் அளித்தார்.

8 பிரிவுகளில் வழக்கு

இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட வந்த போலிசார் ஜெகநாதனை கைது செய்தனர். இவர் அரசு பணியில் இருந்துக்கொண்டே வருமானம் ஈட்டும் வகையில் நிறுவனம் நடத்துவதே இவர் கைதிற்க்கு மற்றொரு காரணம்.

periyar-university-vice-chancellor-arrested

இந்நிலையில், நிறுவனத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தியது ஒப்பந்த முறைகேடு போன்ற 8 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 

நிபந்தனை ஜாமீன்

இந்நிலையில், ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் 7 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக்கூறி மாஜிஸ்திரேட் தினேஷ்குமார் ஜாமினில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.