மனைவியின் சடலத்தின் அருகே தூங்கிய கணவன் - கதறிய குழந்தை! என்ன நடந்தது?

suicide husband wife problem perambalur
By Anupriyamkumaresan Jul 15, 2021 07:47 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

கரூரில் மனைவி துடிதுடிக்க தூங்கில் தொங்கும் போது, கணவரோ குறட்டை விட்டு தூங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் சடலத்தின் அருகே தூங்கிய கணவன் - கதறிய குழந்தை! என்ன நடந்தது? | Perambalur Husband Wife Problem Wife Suicide

பெரம்பலூர் மாவட்டம் பாடலூரை சேர்ந்த தனசேகரனும், கரூர் மாவட்டம் மாயனூரை சேர்ந்த மாலதியும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

மனைவியின் சடலத்தின் அருகே தூங்கிய கணவன் - கதறிய குழந்தை! என்ன நடந்தது? | Perambalur Husband Wife Problem Wife Suicide

வேலூரில் உள்ள தனியார் போதை ஒழிப்பு மையத்தில் மேலாளராக பணியாற்றி வரும் தனசேகரன், போதைக்கு அடிமையான ஒரு போதை ஆசாமியாவார். இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

வழக்கம் போல கடந்த 9-ம் தேதியும் போதையில் வந்த தனசேகரன், தன்னை மறந்து குறட்டை விட்டு தூங்கியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த மனைவி, கணவன் தூங்கி கொண்டிருக்கும் அறையிலேயே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மனைவியின் சடலத்தின் அருகே தூங்கிய கணவன் - கதறிய குழந்தை! என்ன நடந்தது? | Perambalur Husband Wife Problem Wife Suicide

குழந்தையின் கதறல் சத்தத்தை கேட்டு வீட்டிற்குள் வந்த அக்கம்பக்கத்தினர், மாலதி தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாலதியின் சடலத்தை மீட்டு, போதையில் தூங்கி கொண்டிருந்த தனசேகரனை கைது செய்தனர்.