சுய அறிவு உள்ளவர்கள் இந்த காரியத்தை செய்ய மாட்டார்கள் - தயாநிதி மாறன் வீடியோ வெளியீடு
தயாநிதி மாறன் விமானத்தில் உள்ள எமர்ஜென்சி கதவு அருகில் அமர்ந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 10ம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் விமானம் 6E 7339 விமானம் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்துள்ளது.
மன்னிப்பு கேட்ட தேஜஸ்வி சூர்யா
இந்த விமானம் 142 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் அவசர கால வழி ( Emergency Door) திறக்கப்பட்டதால் தாமதமாக புறப்பட்டுள்ளது.
விமானத்தின் அவசர கால வழி அருகில் தேஜஸ்வி சூர்யா அமர்ந்திருந்ததும் அவர் அருகில் அண்ணாமலை அமர்ந்திருந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக விமான ஓட்டுநர் அவசர கால வழியை திறந்தது பற்றி தேஜஸ்வி சூர்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் விமானத்தில் இருந்த பயணிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தேஜஸ்வி சூர்யா அவர் கை தவறுதலாக பட்டு திறந்து விட்டதாக தெரிவித்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். இந்த நிலையில் இச்சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
தயாநிதி மாறன் வீடியோ வெளியீடு
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள வீடியோவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசியுள்ள தயாநிதி மாறன்,
வணக்கம் வாழ்க தமிழ்நாடு, கோவைக்கு இன்டிகோ விமானம் மூலம் பயணம் செய்கிறேன். எனக்கு கிடைத்த இருக்கை எமர்ஜென்சி டோர் பக்கத்தில் உள்ள இருக்கை, ஆயினும் நான் எமர்ஜென்சி கதவினை திறக்க போவதில்லை.
ஏனென்றால் அப்படி திறந்தால் நான் மன்னிப்பு கடிதம் எழுத வேண்டும். அதுமட்டுமல்லாமல் அப்படி திறப்பதால் பயணிகளுக்கு ஆபத்து.
அதுமட்டுமல்லாமல் சுய அறிவு உள்ளவர்கள் இந்த காரியத்தை செய்யமாட்டார்கள். இதுமட்டுமல்லாமல் அனைத்து பயணிகளுக்கும் பயண நேரம் 2 மணி நேரம் மிச்சமாகும். இதை அனைவரும் கடைப்பிடிப்பார்கள் என்று நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
To all flyers, in the interest of passenger safety, please don't fool around with the #EmergencyExit!
— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) January 21, 2023
பயணிகளின் அன்பான "அவசர" கவனத்திற்கு!
@IndiGo6E @DGCAIndia #ResponsibleMP #don @Tejasvi_Surya pic.twitter.com/PYqjeCfyt8