எளிய மக்களுக்கு இரண்டு மாத மின்கட்டணம் விலக்கு வேண்டும்: சீமான் கோரிக்கை!
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு மாதங்கள் மின் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் .
நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அன்றாடம் வேலைக்கு சென்று கிடைக்கும் சொற்ப வருவாயை ஈட்டும் எளிய மக்கள் கடந்த இரண்டு மாத காலமாக எவ்வித வருமானமும் இன்றி வீட்டு வாடகை உணவு குடிநீர் மருத்துவம் முதலியை அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஊரடங்கு ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதிலிருந்து இரண்டு மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்!https://t.co/TemfX4aWA1 pic.twitter.com/feGfGV8C3S
— சீமான் (@SeemanOfficial) June 14, 2021
இந்த நெருக்கடியான காலத்தில் அவர்களுக்கு உறுதுணையாய் நின்று, அடுத்து இரண்டு மாதங்கள் மின் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்