மிலிட்டரி கேன்டீனில் குவிந்த கூட்டம் - எதுக்கு தெரியுமா?
Cuddalore
Military canteen
By Petchi Avudaiappan
கடலூரில் உள்ள மிலிட்டரி கேன்டீனில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்ததால் காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் உள்ள மிலிட்டரி கேன்டீன் இன்று திறக்கப்பட்டது. அங்கு ஒரே நேரத்தில் ஏராளாமானோர் மது வாங்குவதற்காக குவிந்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தால் மட்டுமே, மதுபாட்டில்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என எச்சரித்தனர்.
மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.
ஊரடங்கிற்கு பிறகு இன்றுதான் மிலிட்டரி கேன்டீன் மது விற்பனை தொடங்கப்பட்டதால் இந்த அளவு கூட்டம் கூடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம் :200 அடி பள்ளத்தாக்கில் விழுந்த இராணுவ வாகனம்: பத்து வீரர்கள் உயிரிழப்பு IBC Tamil
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan