பீலே உடல் நல்லடக்கம் செய்ய 9வது மாடியில் உள்ள கல்லறை கேட்டு வாங்கப்பட்டது ஏன் தெரியுமா...?
பீலே உடல் நல்லடக்கம் செய்ய 9வது மாடியில் இருந்த கல்லறை இடம் கேட்டு வாங்கப்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பீலேவின் இறுதிப் பயணம்
கடந்த 30ம் தேதி பிரேசில் கால்பந்து நட்சத்திரம் பீலே தனது 82 வயதில் உயிரிழந்தார். இதனையடுத்து, பிரேசில் நாட்டின் சாவ் பாலோ மருத்துவமனையில் உள்ள பீலேவின் உடல் இன்று காலை அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ மைதானத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். இதனையடுத்து, பீலேவின் முன்னாள் கிளப் சாண்டோஸின் இல்லமான அர்பானோ கால்டீரா மைதானத்தில் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அவரது சவப்பெட்டி சாண்டோஸ் நகரின் தெருக்களில் கொண்டு செல்லப்பட்டன.
ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
"விலா பெல்மிரோ" என்று பிரபலமாக அறியப்படும் சாண்டோஸின் 16,000 இருக்கைகள் கொண்ட அரங்கத்தில் தொடங்கிய அவரது 24 மணி இறுதி அஞ்சலிக்காக மக்கள் திரண்டனர். பீலே விற்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
150,000 க்கும் அதிகமான மக்கள், பலர் பிரேசிலின் சின்னமான மஞ்சள் T.Shirtடை அணிந்திருந்தனர். பிரேசிலியர்களின் சவப்பெட்டியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் வரிசையாக நின்றுக்கொண்டிருந்தனர்.
உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட கல்லறை
இறுதியில் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்பட்டன.
ஏறக்குறைய 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டகங்கள் இங்கு இருக்கின்றன. இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். இங்கு நடைபெற்ற இறுதி சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதிக்கப்படவில்லை.
9வது மாடியில் கல்லறை இடத்திற்கான காரணம்
இந்நிலையில், நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் 9வது மாடியில் பீலே என்று பெயர் பொறிக்கப்பட்ட பெட்டகத்தில் அவரது பதப்படுத்தப்பட்ட உடல் வைக்கப்பட்டதற்காக காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
பீலே தன் வாழ்வில் நிறைய போட்டிகளை விளையாடியது சாண்டோஸ் கிளப் மைதானத்தில் தான். எனவே 9வது மாடியில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து பார்த்தால் அந்த மைதானம் தெளிவாக தெரியும். மறைவுக்கு பின் மைதானத்தை நோக்கி இருக்க வேண்டும் என்பது பீலேவின் ஆசையாம்.
பீலே தன்னுடைய ஆசையை குடும்பத்தினர் தெரிவித்துள்ளார். இதனால் தான் பீலேவின் ஆசையை குடும்பத்தினர் நிறைவேற்றியுள்ளனர்.
Pele was buried yesterday at the Memorial Necrópole Ecumênica, a vertical cemetery in Santos, the tallest in the world. The cemetery is 32 stories high and contains about 16,000 graves. Pele has asked to be buried on the 9th floor so he can watch over the Santos Stadium. pic.twitter.com/97azCqMM8a
— FACTS TV AFRICA (@q2022wc) January 4, 2023